தொப்புள் விவகாரத்தால் ஆடி அடங்கிப்போன நஸ்ரியா
தொப்புள் விவகாரத்தால் சமத்துப் பிள்ளையாகிவிட்டாராம் நஸ்ரியா நசீம்.
சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நடித்துள்ள திரைப்படம் நய்யாண்டி.
இப்படம் வெளியாவதற்கு முன்னாள் நஸ்ரியா கிளப்பிய பிரச்சனையால் கொலிவுட்டே ஆட்டம் கண்டது.
ஒரு வழியாக படமும் வெளியாகிவிட்டது. ஆனால் இந்த சம்பவத்தையடுத்து நஸ்ரியாவை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் தயங்குகிறார்களாம்.
ஹீரோயின்களின் பலத்த போட்டிக்கு மத்தியில் முன்னேறி வந்துக்கொண்டிருந்த நஸ்ரியாவுக்கு இதனால் பின்னடைவு ஏற்பட்டது.
இதையடுத்து தனது கண்டிஷன்களை மூட்டை கட்டி வைத்திருக்கிறாராம்.
மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இப்படத்தை இயக்குகிறார்.
படத்தில் நடிக்க நஸ்ரியா கண்டிஷன் போட்டாரா? என பாலாஜி மோகனிடம் கேள்வி கேட்டால், நஸ்ரியா எந்த கண்டிஷனும் போடவில்லை.
இப்படத்துக்காக துல்கர் சல்மான், நஸ்ரியாவை வைத்து போட்டோ ஷூட் நடத்தினோம். அப்போதுகூட யூனிட்டில் கொடுத்த காஸ்டியூமை அணிந்து போஸ் தந்தார் என்று கூறியுள்ளார்.
Tags: தொப்புள், நஸ்ரியா
No comments:
Post a Comment