Search This Blog

Thursday, 5 September 2013

கொலவெறி’ நாயகனுக்கு இசையமைப்பாளர்கள் மத்தியில் மவுசு

கொலவெறி’ நாயகனுக்கு இசையமைப்பாளர்கள் மத்தியில் மவுசு

பல்வேறு பொழுதுபோக்கு படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் தனுஷ், ‘கொலவெறி’ பாடலுக்குப் பிறகு பாடகராகவும் பிரபலமாகியிருக்கிறார். இசையமைப்பாளர்கள் மத்தியில் அவருக்கு மவுசும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக அவர் நடிக்கும் படங்களில் அவருக்கு பாடும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அந்த வகையில் தான் நடிக்கும் நய்யாண்டி படத்திலும் ஒரு பாடலைப் பாடி அசத்தியிருக்கிறார் தனுஷ். ஜிப்ரான் இசையில் அந்தப் பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் நடிக்காவிட்டாலும்கூட, ஒரு பாடலில் பாடும்படி இசையமைப்பாளர்கள் அவரை அணுகி வருகின்றனர். அந்த வகையில், தனது சகோதரரின் ‘இரண்டாம் உலகம்‘ படத்திலும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

No comments:

Post a Comment