Search This Blog

Thursday, 23 May 2013

கிளைமாக்சை முடிக்க முதுகுவலியில் நடித்த அஜீத்

கிளைமாக்சை முடிக்க முதுகுவலியில் நடித்த அஜீத்

e95a50c1-b065-4819-a0d1-4b45f0bf58aa_S_secvpf.gifநடிகர் ‘அஜீத்’ முதுகு வலியிலும் படப்பிடிப்பில் பங்கேற்று கிளைமாக்ஸ் காட்சியை முடித்து கொடுத்துள்ளார். இந்த காட்சியை படத்தின் இயக்குனர் விஷ்ணு வர்த்தன் குலுமனாலியில் படமாக்க விரும்பினார். அஜீத் டெல்லியில் இருந்து குலுமனாலி புறப்பட்டுச் சென்றார். இப்படத்தில் நடிக்கும் நயன்தாரா, டாப்சியும் அங்கு சென்றார்கள். எல்லோருக்கும் மலையின் அழகை ரசிக்கும் ஆர்வமும் இருந்தது.
நீண்ட தூரம் பயணம் செய்ததால் படப்பிடிப்பு தலத்தில் அஜீத்துக்கு திடீர் முதுகுவலி ஏற்பட்டது. காய்ச்சலிலும் அவதிப்பட்டார். ஆனால் படப்பிடிப்பை தள்ளி வைக்க முடியாத சூழலில் டைரக்டர் இருந்தார். உடனடியாக படப்பிடிப்பை துவங்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. படப்பிடிப்பு தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்று அஜீத் முடிவு செய்து காய்ச்சல் மற்றும் முதுகுவலியை பொருட்படுத்தாமல் நடித்தார்.
கிளைமாக்சும் மேலும் சில சீன்களும் அங்கு பட மாக்கப்பட்டன. அனைத்தையும் முடித்து கொடுத்தார். அஜீத்தின் தொழில் ஈடுபாட்டை படப்பிடிப்பு குழுவினர் வியந்து பாராட்டினர். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்க வில்லை. ‘வலை’ என்ற பெயரைவைக்க பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment