Search This Blog

Thursday, 17 April 2014

வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் மீண்டும் இணையும் சூர்யா-ஸ்ருதிஹாசன்

வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் மீண்டும் இணையும் சூர்யா-ஸ்ருதிஹாசன்

பிரியாணி படத்திற்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கும் புதிய படத்தில் சூர்யா மற்றும் ஸ்ருதிஹாசன் இணையப்போகிறார்களாம். ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில் இந்த ஜோடி இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறதாம். இன்னும் ஒரு மாதத்திற்குள் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கட்பிரபுவின் முந்தைய படங்கள் போல இந்தப் படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பார் எனத் தெரிகிறது. சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்திலும் ஸ்ருதிஹாசன் ஹரி இயக்கும் பூஜை படத்திலும் பிஸியாக இருப்பதால் அப்படங்கள் முடிந்தபின் இப்படத்தைப் பற்றிய தகவல்கள் தெளிவாகத் தெரியவரும்.

No comments:

Post a Comment