வாய்ப்பு கேட்டு ஹீரோக்களுக்கு தூது விடும் நடிகை
சென்னை: பையா நாயகி பட வாய்ப்புகளை பெற ஹீரோக்களுக்கு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறாராம்.
பையா நாயகி பாலிவுட் பக்கம் செட்டில் ஆக நினைத்தார். ஆனால் அங்கே ஒரே படத்தில் பல ஹீரோயின்கள் இருப்பது அவருக்குரிய முக்கியத்துவத்தை குறைப்பதாக கருதினார். இந்நிலையில் அவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கிறார். ஆனால் அந்த படத்திலும் முக்கிய நாயகி உயர்ந்த நடிகை தான்.
தமிழில் அம்மணி கையில் ஒரேயொரு படம் தான் இருக்கிறது. அதனால் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் வாய்ப்பு தேட அவர் முடிவு செய்துள்ளார். இதையடுத்து அவர் ஹீரோக்களுக்கு வாய்ப்பு கேட்டு போன் செய்கிறாராம்.
சென்னை மற்றும் ஹைதராபாத்துக்கு மாறி மாறி பயணம் செய்து தீவிரமாக வாய்ப்பு தேடி வருகிறாராம்.
No comments:
Post a Comment