Search This Blog

Thursday, 13 March 2014

நானும் எத்தனை நாளைக்கு தான் நல்லவளாகவே நடிக்கிறது: தமன்னா

நானும் எத்தனை நாளைக்கு தான் நல்லவளாகவே நடிக்கிறது: தமன்னா

சென்னை: தமன்னாவுக்கு வில்லி வேடத்தில் நடிக்க ஆசை வந்துள்ளதாம்.
அஜீத், விஜய், தனுஷ், கார்த்தி, சூர்யா என்று கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார் தமன்னா. இடையே கோலிவுட்டில் காணாமல் போயிருந்த தமன்னாவுக்கு அஜீத்தின் வீரம் படம் ஒரு பெரிய பிரேக்காக அமைந்தது.

தமன்னா  
இதையடுத்து அம்மணிக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது. இந்நிலையில் அவர் தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் நல்லவளாகவே நடித்து போரடிக்கிறது. ஏதாவது வில்லத்தனம் உள்ள கதாபாத்திரமாக இருந்தால் கூறுங்கள் நடிக்கிறேன் என்கிறாராம்.
முன்னதாக த்ரிஷா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்றார். இந்நிலையில் தமன்னாவுக்கும் அதே ஆசை வந்துள்ளது.
என்னாச்சு இந்த ஹீரோயின்களுக்கு. இப்படி வில்லத்தனமாக யோசிக்கிறாங்களே.

No comments:

Post a Comment