விஜயகாந்த் உண்மையிலேயே எதற்காக சிங்கப்பூர் செல்கிறார் தெரியுமா?
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் படத்திற்கு லொகேஷன் பார்த்து இறுதி செய்ய சிங்கப்பூர் செல்கிறாராம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் இன்று இரவு சிங்கப்பூர் செல்கிறார் என்று கூறப்பட்டது. அவர் மருத்துவ பரிசோதனைக்காகவே வெளிநாடு செல்கிறார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கிடையே அவர் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வெளிநாடு செல்வதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து தேமுதிக வட்டாரத்தில் கேட்டபோது, கேப்டன் தனது மகன் சண்முக பாண்டியனின் படத்திற்கு லொகேஷனை தேர்வு செய்ய சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா செல்கிறார் என்று தெரிவித்தார்கள்.
சகாப்தம் படம் மூலம் விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் தந்தை வழியில் ஹீரோவாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜூனியர் கேப்டனுக்கு ஸ்ரீதேவியின் மகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
ஸ்ரீதேவியின் மகள் ஜான்விக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் அவர் இன்னும் எந்த வாய்ப்பையும் ஏற்காமல் உள்ளார்.
No comments:
Post a Comment