Search This Blog

Friday, 17 January 2014

முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு ஜில்லா இயக்குனர் படத்தில் நடிக்க விரும்பும் விஜய்

முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு ஜில்லா இயக்குனர் படத்தில் நடிக்க விரும்பும் விஜய்

சென்னை: ஜில்லா படத்தின் வெற்றியை அடுத்து நேசன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.
கடந்த 10ம் தேதி ரிலீஸான ஜில்லா படம் கல்லா கட்டி வருகிறது. இதனால் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மட்டும் அல்ல விஜய்யும் குஷியாக உள்ளார். படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பில் அசந்து போயுள்ளார் விஜய்.
விஜய் படத்தை முடித்த கையோடு நேசன் தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபுவை வைத்து படம் எடுக்க இருந்தார். ஆனால் விஜய் நேசனை அணுகி நாம் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவோம்.

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன். அதையடுத்து நாம் மீண்டும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்று நேசனிடம் விஜய் தெரிவித்துள்ளாராம்.
முன்னதாக தலைவா படம் ஓடாததால் அதை இயக்கிய ஏ.எல். விஜய்யை கண்டாலே தளபதி காத தூரம் ஓடுகிறார் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment