Search This Blog

Wednesday, 25 December 2013

தலைமுறைகள் படம் பார்த்தார் ரஜினி... பாலுமகேந்திரா, சசிகுமாருக்குப் பாராட்டு!

தலைமுறைகள் படம் பார்த்தார் ரஜினி... பாலுமகேந்திரா, சசிகுமாருக்குப் பாராட்டு!

தனக்குப் பிடித்த படங்களை உடனுக்குடன் பாராட்டிவிடுவது ரஜினி வழக்கம்.
சமீபத்தில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘தலைமுறைகள்' படத்தையும் பார்த்தார் ரஜினி.
இந்தப்படம் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தாத்தாவாக பாலுமகேந்திராவும். பேரனாக மாஸ்டர் கார்த்திக்கும் நடித்திருக்கிறார்கள். சசிகுமார் தனது ‘கம்பெனி புரடக்‌ஷன்' சார்பாக படத்தை தயாரித்திருக்கிறார்.
படம் பார்த்து முடித்ததுமே இயக்குனர் பாலுமகேந்திராவையும் சசிகுமாரையும் போனில் அழைத்து நீண்டநேரம் பாராட்டியதோடு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தமிழுக்கு மிகப் பெரிய மரியாதை செய்துவிட்டீர்கள் என்று அவர் தனது பாராட்டில் தெரிவித்தார்.
28 வருடங்களுக்கு முன்பு பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்' என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
ஆனால் ரஜினி நடித்த முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திரா இருந்துள்ளார்.

No comments:

Post a Comment