ரஜினியின் விட்டுக் கொடுப்பால் அஜித், விஜய் பொங்கல் பிழைப்பு
பொங்கலுக்கு வெளியாவதாக இருந்தால் கோச்சடையானுக்கு 750 அரங்குகள் நிச்சயம் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உறுதியாகக் கூறியும், அதே திகதியில் வெளியாகும் விஜய், அஜீத் படங்கள் பாதிக்க வேண்டாம் என்று கூறி கோச்சடையானை தள்ளி வெளியிட அறிவுறுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
இதனை படத்தின் தயாரிப்பாளரும் உறுதி செய்துள்ளார்.
கோச்சடையான் படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ம் திகதி வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மட்டும் 750 திரையரங்குகளை தர திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் அதே திகதியில் விஜய் நடித்த ஜில்லாவும் அஜீத் நடித்த வீரமும் வெளியாவதாக அறிவித்தனர். இதனால் விஜய் மற்றும் அஜீத் படங்களுக்கு குறைவான திரையரங்குகளே கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த சூழலில், வீரம் படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதை நாங்கள் முன்கூட்டியே அறிவித்துவிட்டோம், ஆனால் அரங்குகள் கிடைப்பது கஷ்டமாக உள்ளதாக ரஜினியிடம் தயாரிப்பாளர் வெங்கட்ராம ரெட்டி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தனது வீட்டில் வைத்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், தயாரிப்பாளர் முரளி மனோகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்திய ரஜினி, நம்மால் எந்த வகையிலும் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று கூறியதோடு, ´நம்ம படம் சோலோவாவே வரட்டும். அதுக்கேத்த மாதிரி ஒரு திகதியை முடிவு பண்ணுங்க,” என்றாராம்.
No comments:
Post a Comment