25வது ஆண்டில் கேஎஸ் ரவிக்குமார்- பிரமாண்ட பாராட்டு விழா
சென்னை: இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆவதையொட்டி அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
தமிழ் சினிமாவில் இருபத்தைந்து வருடங்களாக இயக்குநராக வலம் வருபவர் கேஎஸ் ரவிக்குமார்.
புரியாத புதிர் என்ற படம்தான் இயக்குநராக அவருக்கு முதல் படம். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் உள்பட அத்தனை நட்சத்திரங்களையும் வைத்து படங்கள் இயக்கிவிட்டார். சூப்பர் ஸ்டாருடன் நடிகர் திலகம் சிவாஜியை வைத்து படையப்பாவையும் இயக்கினார்.
இந்த ஆண்டு, திரைத்துறையில் அவருக்கு வெள்ளி விழா ஆண்டு. இதனை கொண்டாட பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது ராஜ் டிவி.
இந்த விழா 2014 ஜனவரி 4-ம் ஆண்டு தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
கே.எஸ்.ரவிகுமாருக்கு நினைவுப் பரிசை வழங்கி கவுரவிக்கிறார் கமல்ஹாஸன்.
விழாவில் திரையுலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்கிறார்கள்.
No comments:
Post a Comment