Search This Blog

Sunday, 10 November 2013

கார்த்தியின் புதிய படத்தை இயக்குகிறார் சாந்த குமார்

கார்த்தியின் புதிய படத்தை இயக்குகிறார் சாந்த குமார்

அத்தனை பெரிய ஹிட் கொடுத்துவி்ட்டு சாந்தமாக இருந்த அவர் இப்போது புதிய படம் இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.
இந்தப் படத்தின் ஹீரோ, எப்படியாவது அடுத்து ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ள கார்த்தி.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் ‘பிரியாணி' மற்றும் ‘அட்டக்கத்தி' ரஞ்சித் இயக்கும் ‘காளி' படங்களுக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் இது.
முழுக்க முழுக்க மாறுபட்ட கதைகளத்துடன் இந்த படத்தை இயக்கவிருக்கிறார் சாந்தகுமார். இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்தான் தயாரிக்கிறது. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
கார்த்தி இப்போது நடிக்கும் அனைத்துப் படங்களுமே ஸ்டுடியோ கிரீன் தயாரிப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment