Search This Blog

Sunday, 24 November 2013

பஞ்ச் வசனமே இல்லாத அஜீத்தின் வீரம்

பஞ்ச் வசனமே இல்லாத அஜீத்தின் வீரம்

சென்னை: வீரம் படத்தில் அஜீத் குமார் பஞ்ச் வசனங்களே பேச மாட்டாராம்.
பொங்கல் விருந்தாக வருகிறது அஜீத்தின் வீரம் படம். அண்மை காலமாக நகரத்தைச் சேர்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஜீத் இதில் பக்கா கிராமத்தானாக நடித்துள்ளார்.
4 தம்பிகள் மீது பாச மழை பொழியும் அண்ணனாக வருகிறார். படத்தில் சென்டிமென்ட்டுடன் ஆக்ஷனும் இருக்கிறதாம். மேலும் அஜீத் நம்மை சிரிக்க வைக்க காமெடியிலும் ஒரு கை பார்த்திருக்கிறாராம்.
அஜீத் சந்தானம், அப்புக்குட்டி, வித்யுலேகா ராமன், மயில்சாமியுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி திரை அரங்கை சிரிப்பொலியில் அதிர வைக்கும் என்கிறார்கரள். வழக்கமாக காமெடியில் விஜய் தான் கலக்கி வந்தார். தற்போது அந்த பட்டியலில் அஜீத்தும் சேர்ந்துள்ளார்.
பொங்கலுக்கு அஜீத்தின் படம் தனியாக வரவில்லை. கூடவே விஜய்யின் ஜில்லா மற்றும் ரஜினியின் கோச்சடையானும் வருகிறது.

No comments:

Post a Comment