Search This Blog

Wednesday, 6 November 2013

திரை உலகிற்கு வந்தவுடன் தல, தளபதியாக நடிகர்கள் கனவு காண்பது தவறு: கேயார்

திரை உலகிற்கு வந்தவுடன் தல, தளபதியாக நடிகர்கள் கனவு காண்பது தவறு: கேயார்

தல, தளபதி
திரைத்துறைக்குள் நுழைந்தவுடனேயே தல, தளபதி ஆகிவிட வேண்டும் என்று நடிகர்கள் கனவு காண்பது தவறு. கஷ்டப்பட்டு உழைத்தால் தான் சினிமாவில் நல்ல நிலைமையை அடைய முடியும் என்றார் கேயார்.

விக்ரம்

ஒரு நல்ல நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற விக்ரமுக்கு 18 ஆண்டுகள் எடுத்தன. அவர் பல படங்களில் நடித்தபோதிலும் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதனால் அவர் விரக்தி அடைந்து கெட்டப்பழக்கங்களுக்கு அடிமையாகிவிடவில்லை. மாறாக டப்பிங் பேசுவது உள்ளிட்ட பிற வேலைகளை செய்து வந்தார் என்று கேயார் தெரிவித்தார்.

சேது

சேது படம் மூலம் தான் விக்ரமுக்கு சிறந்த நடிகர் என்ற அங்கீகாரம் கிடைத்தது. சினிமாவில் சாதிக்க கஷ்டப்பட வேண்டும். சினிமாவுக்கு வருகிறவர்கள் கஷ்டப்பட்டால் தான் முன்னேற முடியும் என்று கேயார் கூறினார்.

சென்னை: திரை உலகிற்கு வந்தவுடன் தல, தளபதி ஆகிவிட வேண்டும் என்று நடிகர்கள் கனவு காண்பது தவறு என்று தயாரிப்பாளர் கவுன்சில் தலைவர் கேயார் தெரிவித்துள்ளார்.
விஜயலட்சுமி மற்றும் ராஜலட்சுமி ஆகிய பெண் இயக்குனர்கள் சேர்ந்து தயாரிக்கும் காதல் சொல்ல ஆசை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் இன்று நடந்தது. நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சி மூலம் இயக்குனராக அறிமுகமான தமிழ் சீனு இப்படத்தை இயக்குகிறார். இதில் அஷோக் மற்றும் மது ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். நாயகிகளாக புதுமுக நடிகைகள் நடிக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், நடிகர் விஜய் சேதுபதி, நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கேயார் பேசுகையில்,

No comments:

Post a Comment