Search This Blog

Saturday, 24 August 2013

ஜெயம் ரவி- திரிஷா நடித்துள்ள ‘பூலோகம்’ படப்பிடிப்பு முடிவடைந்தது

ஜெயம் ரவி- திரிஷா நடித்துள்ள ‘பூலோகம்’ படப்பிடிப்பு முடிவடைந்தது

ஜெயம் ரவி- திரிஷா இணைந்து நடிக்கும் படம் பூலோகம். இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

ஆசிய குத்துச்சண்டை வீரர் மதனால் ஈர்க்கப்பட்ட இயக்குனர், இந்தத் திரைப்படத்தின் கதையை ஒரு குத்துச் சண்டை வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்திற்கு ஒரு புதிய பரிணாமம் கொடுப்பதற்காக நடிகர் ஜெயம் ரவி தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு நடித்துள்ளார். படம் முடிவடைந்ததை அடுத்து படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

No comments:

Post a Comment